இந்தியா

காசநோயை கட்டுப்படுத்த அதிக கவனம் தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்

webteam

காசநோயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்துமாறு மாநில முதலமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் செயல்பாடுகளை குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்து பணிகளை தொய்வின்றி செயல்படுத்துமாறு கடிதத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். காசநோயாளிகளை அடையாளம் கண்டு, முறையான சிகிச்சை அளிப்பதுடன் சிகிச்சை வெற்றி பெறும் வரை கண்காணிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் முதலமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.