இந்தியா

18 ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் உயிருக்கு போராடிய நபர் மீட்பு

webteam

லடாக் பள்ளத்தாக்கில் உயிருக்கு போராடிய நபரை விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

மலையேற்றத்திற்காக லடாக் சென்றிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பனிச்சரிவில் சிக்கி போராடிக்கொண்டிருந்தார். மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று அங்கு சென்ற விமானப்படையினர் சுமார் 18 ஆயிரம் அடி பள்ளத்தில் நிற்கதியாய் தவித்தவரை ரோப் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தினர்.