இந்தியா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்: செப்டம்பர் முதல் வாரத்தில் தொடக்கம் !

jagadeesh

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் ஆலோசனை நடத்தினர். இதன்படி நாடாளுமன்ற இரு அவைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

உறுப்பினர்களுக்கு அவை அலுவல் தெரியும் வகையில் 4 பெரிய திரைகளும் 6 சிறிய திரைகளும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்கும் என்றும், 7 முதல் 8 நாட்கள் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டத்தொடரில் 11 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.