இந்தியா

நடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்!

நடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்!

webteam

போர் விமானம் என நினைத்து இந்திய பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் போர் விமானங்கள் வழிமறித்த செய்தி இப்போது வெளியாகியுள்ளது.

டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியும் வழக்கம் போல டெல்லியில் இருந்து இந்த விமானம் காபூலுக்குப் புறப்பட்டது. அதில் 120 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததும், இரண்டு எப்-16 ரக பாகிஸ்தான் போர் விமானங்கள் அதை நடுவானில் மறித்தன.

தாழ்வாகப் பறக்கும்படியும், விமான விவரங்களைக் கூறும்படியும் பாகிஸ்தான் விமானிகள் சொன்னார்கள். ’இது பயணிகள் விமானம், போர் விமானம் அல்ல’ என்று ஸ்பைஸ்ஜெட் விமானி தெரிவித்தார். அதை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் போர் விமானங்கள், ஆப்கானிஸ்தான் எல்லை வரை, இந்திய விமானத்துக்கு பாதுகாப்பாகச் சென்றன. இந்த தகவலை மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜம்முகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்த பின் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து, இந்த சம்பவம் நடந்துள்ளது.