இந்தியா

பட்டாசு வெடித்ததில் பிரச்னை - இளைஞர் கொலை

webteam

பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட பிரச்னையில் இளைஞர் ஒரு வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிஷாவில் நிகழ்ந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நீதிமன்றம் அனுமதித்த நேரத்தை கடந்தும், நாடு முழுவதும் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் மாசுகள் அதிக அளவில் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. குடும்பங்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் பட்டாசுகளை உற்சாகமாக வெடித்தனர். 

இந்நிலையில் ஒடிஷாவில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட பிரச்னையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஒடிஷாவின் புவனேஷ்வர் பகுதியில் அமரேஷ் நாயக் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துள்ளார். அப்போது சத்தம் அதிகமாக இருப்பதாகவும், வெடிப்பதை நிறுத்துமாறும் அமரேஷ் மற்றும் அவரது நண்பர்களை ஒரு கும்பல் வந்து தடுத்துள்ளனர். 

இதனால் இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் அமரேஷை கூர்மையான ஆயுதங்களால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.