இந்தியா

வெங்கடேஸ்வரா கோயிலுக்கு ரூ.8 கோடி மதிப்பிலான தங்க மாலை பரிசளிப்பு

Rasus

திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலுக்கு ரூ.8 கோடிக்கும் அதிகமான தங்க மாலை பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

என்ஆர்ஐ ஆன மந்தேன்னா ராமலிங்க ராஜு என்பவர் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலுக்கு ரூபாய் 8 கோடிக்கும் அதிகமான தங்க மாலையை பரிசாக கொடுத்துள்ளார். இதன் எடை 28 கிலோ. தங்க மாலையில் 1008 பொன் காசுகள் உள்ளன. அதில் கடவுள் வெங்கடேஸ்வராவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்க மாலையை ராமலிங்க ராஜு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவிடம் வழங்கியுள்ளார். அப்போது ராமலிங்க ராஜுவுக்கு சந்திரபாயு நாயுடு பாராட்டு தெரிவித்தார். இந்த தங்க மாலையை செய்து கொடுக்கும் பணியை மேற்கொண்ட தொழிலாளருக்கு மட்டுமே ஊதியமாக 27.5 லட்சத்தை ராமலிங்க ராஜு வழங்கியுள்ளார்.