இந்தியா

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 10 லட்சம் பேர் பங்கேற்பு

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 10 லட்சம் பேர் பங்கேற்பு

webteam

வங்கித்துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ‌வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்ததில் ஈடுபடுகின்றனர்.

வராக்கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும், நிரந்தர வேலை வாய்ப்புகளில் அவுட்சோர்சிங்கை அனுமதிக்க கூடாது, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்ததில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை சேர்ந்த 7,000 வங்கிக்கிளை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்ததில் பங்கேற்க உள்ளனர்.