இந்தியா

டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்

webteam

டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உடனே அமலுக்கு வருவதாகவும் டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரவு ஊரடங்கு உத்தரவின் முந்தைய சுற்றுகளைப்போலவே அத்தியாவசிய சேவைகளும் வாகனங்களின் அவசர இயக்கமும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.