இந்தியா

ஊழியர்கள் சேர்க்கை குறித்து தெரிவிக்க புதிய நடைமுறை: இ.பி.எஃப்.ஓ. அறிவிப்பு

webteam

புதிதாக பணியில் சேர்க்கப்படும் ஊழியர்கள் பற்றிய விவரங்களை அந்தந்த நிறுவனங்கள் இணையதளம் மூலம் தெரிவிக்கும் நடைமுறை அடுத்த மாதம் அமலுக்கு வருவதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிதாக பணியில் சேர்க்கப்படும் ஊழியர்கள் பற்றிய விவரங்களை இணையதளம் வழியாக அந்தந்த நிறுவனங்கள் தெரிவிக்கும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதனால் பணியில் சேரும் ஊழியர்களின் விவரத்தை படிவம் 9 மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு நிறுவனங்கள் தெரிவிக்கும் நடைமுறை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, இணையதளம் வழியாக மட்டுமே தெரிவிக்க வேண்டிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.