இந்தியா

திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் நேபாள பிரதமர்

webteam

நேபாளம் பிரதமர் ஷேக் பகதூர் தூபே இன்று திருப்பதி ஏழுமலையான தரிசிக்க வருகிறார். 

நேபாள பிரதமர் ஷேக் பகதூர் தூபே கடந்த இரண்டு தினங்களாக இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி ஏழமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேபாள் பிரதமர் ஷேக் பகதூர் தூபே ஒருநாள் பயணமாக வருகிறார். ஐதராபாத்தில் இருந்து சிறப்பு விமான மூலம் திருப்பதி விமான நிலையம் வந்து அங்கிருந்து கார் மூலம் திருமலை செல்லும் அவர் ஸ்ரீகிருஷ்ண விருந்தினர் மாளிகையில் ஓய்வுக்கு பின் சுவாமி தரிசனம் செய்துவிட்டு.பிற்பகல் 2.30 மணி அளவில் திருப்பதி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமான மூலம் கைய்யா செல்கிறார். பிரதமர் வருகையால் திருமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பபாடுகள் செய்யப்பட்டுள்ளது.