நீட் தேர்வு புதிய தலைமுறை
இந்தியா

தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்; தேசிய தேர்வு முகமை கொடுத்த விளக்கம்.. விமர்சனங்கள் எழுவது ஏன்?

PT WEB

இன்றைய செய்திக்கு அப்பால், பகுதியில், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் தலைப்பில் “நீட் தேர்வு வெளிப்படை தன்மை அவசியம்” என்ற தலைப்பில் வெளிவந்த ஆர்ட்டிகள் பற்றி பேசப்பட்டது.

இதில், நீட் தேர்வின் முடிவுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது முழுமதிப்பெண்ணான 720 மதிப்பெண்னை, 67 மாணவர்கள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்கள். சில மாணவர்கள் 719,718 என்ற மதிப்பெண்ணும் பெற்று இருக்கிறார்கள். இந்த மதிப்பெண் வாங்குவது சாத்தியமே இல்லை . சரியான விடையளித்தால் 4 மதிப்பெண்களும் தவறான விடையளித்தால் -1 மதிப்பெண் குறைக்கப்படும். இந்தமாதிரியான தேர்வு முறைகளில் முழு மதிப்பெண் வாங்குவது சாத்தியம் இல்லை. என்று கூறப்படுகிறது. இதற்கு தேசிய தேர்வு முகமை கொடுத்த விளக்கத்தை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.