இந்தியா

தேசிய இளைஞர் தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து

webteam

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 12ஆம் தேதியான இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமாகும். இந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக 1984ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனால் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தில் இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இளைஞர் தினத்திற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்றைய தினம் நாம் அனைவரும் சுவாமி விவேகானந்தரை நினைவு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் போற்றத்தக்க ஒரு அறிஞர், துறவி மற்றும் தேசத்தை உருவாக்கியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேசிய இளைஞர் தினத்தின் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.