இந்தியா

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் மேலும் சரிவு: விவசாயிகள் வேதனை

Rasus

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 112 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து தமிழகத்திற்கு 104 அடிக்கும் மேல் உள்ள தண்ணீரை மட்டுமே எடுக்க முடியும். இந்த தண்ணீர் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே போதுமானதாக இருக்கும் என்பதால் இந்த ஜூன் முதல் வாரத்தில் தமிழக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள 14 ‌ஆயிரத்து 707 ஏக்கர் பாசன பகுதிகள் முல்லைப்பெரியாறு அணையை நம்பி உள்ள நிலையில், முதல் போக சாகுபடி தள்ளிப்போகும்‌நிலை உருவாகி உள்ளது.