இந்தியா

ஒன்றாகக்கூடி தீபாவளி கொண்டாடிய முலாயம்-அகிலேஷ்

webteam

உத்தரப்பிரதேச அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் முலாயம் சிங் யாதவும் அவரது மகன் அகிலேஷ் சிங் யாதவும் ஒன்றாகக்கூடி தீபாவளி கொண்டாடினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவாவில் உள்ள வீட்டில் முலாயம் சிங் அவரது தம்பி ஷிவ்பால் சிங், மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஒன்றாக தீபாவளி கொண்டாடினர். முலாயம் குடும்பத்தை சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். மகன் அகிலேஷூடன்  கருத்து வேறுபாடு கொண்டுள்ள முலாயம் சிங், தனிக்கட்சி தொடங்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது.அத்துடன் இவரும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக தீபாவளி கொண்டாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.