இந்தியா

ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியீடு: மத்திய அரசு

webteam

ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையிலான தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக கூபா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. அந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.