MODEL PARAMETERS முகநூல்
இந்தியா

கேரளா | பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிய நிறுவப்படும் "MODEL PARAMETERS"! என்ன பலன் கிடைக்கும்?

PT WEB

கேரளா திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “வயநாட்டில் நிகழ்ந்துள்ள பேரிடரின் மூலக்காரணம் குறித்து விரிவான ஆய்வு செய்யப்படும். தீவிர மழையின் தாக்கத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள ‘Model Parameters’ நிறுவுவதற்கான ஆய்வு, ‘INSTITUTE FOR CLIMATE CHANGE STUDIES’ நிறுவனம் மூலம் நடத்தப்படும்.

இந்த ஆய்வுகள் மூலம் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, சூறாவளி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள, விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

இந்த சிறப்பு ஆய்வுகளுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இது கேரளாவில் பேரிடர்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதோடு, பேரிடர்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும்.

மேலும் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து துவக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். இத்துடன் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் கட்டித் தருவதாக உறுதியளித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்தார்.