இந்தியா

டெல்லி சுதந்திர தின கொண்டாட்டம்: - 2 நாட்களுக்கு மெட்ரோ நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த தடை

webteam

டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டங்களை ஒட்டி மெட்ரோ நிலையங்களில் 14 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 15ஆம் தேதி மதியம் 2 மணி வரை வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து மாற்றம், தீவிர கண்காணிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லி மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ நிலையங்களின் பார்க்கிங் வசதி 14ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 15ஆம் தேதி மதியம் 2 மணி வரை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி மெட்ரோ சேவை என்பது வழக்கம்போல இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.