இந்தியா

காரில் பாலியல் சீண்டல்: நண்பரால் தூக்கி வெளியே வீசப்பட்ட இளம் பெண் !

jagadeesh

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் காரில் பாலியல் சீண்டலுக்குள்ளான இளம் பெண், அக்காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். பின்பு அந்தக் கார் தாறுமாறாக மோதி சாலையில் சென்றுக்கொண்டிருந்த தம்பதி மீது மோதி விபத்துக்குள்ளானது.

கொல்கத்தா நகரின் அனந்தபூர் பகுதியில் சனிக்கிழமை இரவு பெண் ஒருவர் நண்பரை பார்க்க சென்றுள்ளார். நண்பரை பார்த்துவிட்டு அவருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணை அந்த நண்பர் ஓடும் காரிலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் ஓடும் காரிலிருந்துப் பெண்ணை கீழே தள்ளியுள்ளார்.

சாலையில் சென்றுக்கொண்டிருந்த நிலஞ்சனா சாடர்ஜி என்ற பெண்ணும் அவருடைய கணவரும் காரை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் காரையோட்டிய நபர் நிலஞ்சனா மீது மோதிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காயமடைந்த நிலஞ்சனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்பு நண்பரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு காரில் இருந்து தள்ளப்பட்ட பெண் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இந்தச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.