கேரளா முகநூல்
இந்தியா

கேரளா | தொண்டையில் இட்லி சிக்கியதால் உயிரிழந்த நபர்!

PT WEB

கேரளாவில் கஞ்சிக்கோடு பகுதியில் திருவோண பண்டிகையையொட்டி உணவு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்று அதிக இட்லி சாப்பிடுபவருக்கு பரிசு என அறிவிக்கப்பட்டது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பங்கேற்றுள்ளார்.

சுரேஷ்

போட்டியின் போது இட்லி தொண்டையில் சிக்கியதால், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உணவு போட்டியில் இட்லி சாப்பிட்டு உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த உணவாகினும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது!