இந்தியா

28 வருடத்தில் 7 திருமணம்: காவலர் சஸ்பெண்ட்

28 வருடத்தில் 7 திருமணம்: காவலர் சஸ்பெண்ட்

webteam

மகாராஷ்டிராவில் 7 பேரை திருமணம் செய்ததாக மனைவி அளித்த புகாரின் பேரில் காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மான்படா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார். அதில் அவர் 7பெண்களை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்துள்ள பெண் அம்பர்நாத் பகுதியில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டனர்.

விசாரணையில் காவலர் கடந்த 28 வருடங்களில் 7 பெண்களை திருமணம் செய்தது உறுதியாகியுள்ளது. அந்த காவலர் கடந்த 1989ஆம் ஆண்டில் முதல் திருமணம் செய்துள்ளார், இதன்பின்னர் 1992,1993,1995,1998, 2007 மற்றும் 2014 இல் பல்வேறு திருமணங்கள் செய்தது தெரியவந்துள்ளது. இதில் அவரது 7 மனைவிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். எந்த காரணத்திற்காக 7 பேரை திருமணம் செய்தார்..? அதனை எப்படி ஒருவருக்கும் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் மறைத்து வந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.