இந்தியா

ஏடிஎம் காவலரை தாக்கிய கொள்ளையன்: சிசிடிவி காட்சி வெளியீடு

webteam

கோவாவில் வங்கி ஏடிஎம் ஒன்றின் காவலரை கொள்ளையர் ஒருவர் கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

கோவா மாநிலம் பனாஜியில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி ஏடிஎம்க்குள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஒருமணி அளவில் புகுந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது அவரை தடுக்க முயன்ற ஏடிஎம் காவலரை கடுமையாக தாக்கி விட்டு தப்பிச் சென்றார். இந்தக்காட்சி அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.