இந்தியா

சிவன் கோயிலுக்கு துடைப்பம் காணிக்கை

webteam

மகாசிவராத்திரியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் உள்ள பாடலேஸ்வர் கோயிலுக்கு பக்தர்கள் துடைப்பங்களை காணிக்கையாக அளித்தனர்.

தோல் தொடர்பான நோய்களில் இருந்து குணமடைய துடைப்பங்களை இறைவனுக்கு காணிக்கையாக அளிப்பது பாடலேஸ்வர் கோயிலில் வழக்கமாக இருந்து வருகிறது. உண்மையான பக்தியுடன் அளிக்கப்படும் எந்த பொருளையும் இறைவன் ஏற்றுக்கொள்வார் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் துடைப்பம் காணிக்கை அளிப்பது வழக்கமாக இருந்து வருவதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.