இந்தியா

ம.பி: 'எருமை மாடு பால் கறக்க மறுக்கிறது' - போலீசில் விவசாயி வினோத புகார்

JustinDurai
எருமை மாடு பால் கறக்க அனுமதிக்க மறுப்பதாக போலீசில் புகார் செய்த கிராமவாசியால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் நயாகாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுலால். விவசாயியான இவர் வீட்டில் எருமை மாடு ஒன்று வளர்த்து வருகிறார். அந்த எருமை மாடு திடீரென கடந்த சில நாள்களாகப் பால் கறக்க பாபுலாலை அனுமதிக்காமல் முரண்டு பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாட்டுக்கு யாரோ பில்லி சூனியம் வைத்திருப்பதாகக் கருதிய பாபுலால், எருமை மாட்டை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குள் வந்து புகார் அளித்தார். பாபுலாலின் புகாரைக் கேட்டு திடுக்கிட்ட போலீசார், அவரிடம் மாட்டைக் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு, எருமை மாடு பால் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த பாபுலால் காவல் நிலையத்துக்கு வந்து, மாடு பால் கொடுக்க ஆரம்பித்து விட்டதாக மகிழ்ச்சிப் பொங்க கூறி நன்றி தெரிவித்தார். இந்த வினோத சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.