madhya pradesh video x page
இந்தியா

”அவரை சிறையில தள்ளுங்க”|தந்தை மீது 5 வயது சிறுவன் புகார்; காவல் நிலையத்தில் நிகழ்ந்த விநோத சம்பவம்!

Prakash J

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கிராம பக்கனேர் காவல் நிலையத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் காத்ரி. இவருடைய 5 வயது மகன் ஹஸ்னைன். இந்தச் சிறுவன்தான், தனது தந்தை மீதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல் நிலையத்திற்குச் சென்ற அந்தச் சிறுவன், அங்கிருந்த அதிகாரிகளிடம் தந்தை மீது புகார் அளிக்க வந்திருப்பதாகக் கூறியுள்ளார். அவர்கள், அந்தச் சிறுவனை நாற்காலியில் அமரவைத்து மேலும் விவரம் கேட்டுள்ளனர்.

அப்போது அந்தச் சிறுவன், “என்னை ஆற்றில் குளிக்க எனது தந்தை தடை விதிக்கிறார். மேலும் திட்டுவதுடன் என்னை அடிக்கவும் செய்கிறார். ஆகையால், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரைச் சிறையில் தள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க:கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை|உடலில் இருந்தது150 கிராம் விந்தணுவா? பிரேதப் பரிசோதனை சொல்வது என்ன?