இந்தியா

இது கொஞ்சம் டூ மச் தான்: 10 மாணவர்கள் சஸ்பென்ட்!

webteam

விடைத் தாளில் பாடல் மற்றும் காதல் கவிதைகளை எழுதிய 10 மாணவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருக்கிறது பால்குர்காட் சட்டக்கல்லூரி. இங்கு மூன்றாவது செமஸ்டர் தேர்வு நடந்தது. இதை எழுதிய மாணவர்களில் சிலர், டீட்டெய்லான பதில் எழுத கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு இந்தி மற்றும் பெங்காலி பாடல்கள் மற்றும் காதல் கவிதைகளை எழுதியுள்ளனர். பேப்பரை திருத்திய ஆசிரியர்களுக்கு இதைக் கண்டு அதிர்ச்சி. கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அப்படி எழுதப்பட்ட விடைத்தாள்களை மட்டும் தனியாக எடுத்து அந்த மாணவர்களை கட்டம் கட்டியது நிர்வாகம். பிறகு குழு அமைத்து விசாரித்தது. அது உண்மை என தெரியவந்ததை அடுத்து, சுமார் 10 மாணவர்களை ஒரு வருடம் சஸ்பென்ட் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம்.