இந்தியா

மகாராஷ்ட்டிரா ஆளுநரைச் சந்தித்த நடிகை கங்கனா ரனாவத் !

மகாராஷ்ட்டிரா ஆளுநரைச் சந்தித்த நடிகை கங்கனா ரனாவத் !

jagadeesh

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்ட்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நேரில் சந்தித்துள்ளார்.

மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல இருப்பதாக அண்மையில் சொல்லியிருந்தார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். அதனையடுத்து மும்பை பாந்த்ராவில் உள்ள அவருக்கு சொந்தமான கட்டடம் மாநகராட்சி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக சொல்லி இடித்தது மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா அரசு.

இந்நிலையில் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை கங்கனா ரனாவத் கொண்டுவரப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த கங்கனா "தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்களை நான் பயன்படுத்தி உள்ளேனா என்பதை அறிய மருத்துவ சோதனையிடுங்கள். எனது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான் மும்பையை விட்டே செல்ல தயார்" என நடிகை கங்கனா தெரிவித்தார்.

இந்தச் சூழலில் மகாராஷ்ட்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை கங்கனாவும் அவரது சகோதரியுமான ரங்கோலியும் சந்தித்துள்ளனர்.