இந்தியா

மந்திர சக்திக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொன்று புதைப்பு: விசாரணையில் பகீர் தகவல்

மந்திர சக்திக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொன்று புதைப்பு: விசாரணையில் பகீர் தகவல்

webteam

மந்திர சக்திக்காக கேரளாவில் ஒரே குடும்பத்தில் நான்கு பேர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகில் உள்ள முண்டன்முடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (52). இவர் மனைவி சுசிலா (50). இவர்களது மகள் அர்ஷா (21). மகன் அர்ஜுன் (19). ரப்பர் தோட்டத்தில் பணிபுரிந்த கிருஷ்ணன் மாந்தீரிக தொழிலும் ஈடுபட்டு வந்துள் ளார்.  இந்நிலையில் தினமும் காலையில் பால் வாங்க வெளியே வரும் கிருஷ்ணன், கடந்த சில நாட்களாக வரவில்லை. அவரது வீட்டில் உள்ளவர்களையும் காணவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்து வீட்டினரும் அவரது உறவினர்களும் வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ரத்தக்கறை இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது தரையிலும் சுவரிலும் ரத்தக்கறை இருந்ததை கண்டனர். 

பின்னர் அங்கு ரத்தக் கறை படிந்த சுத்தியல் ஒன்றையும் கத்தியையும் கண்டுபிடித்தனர். அதைக் கைப்பற்றிய போலீசார், வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். ஒரு குழியில் புதிதாக மண் மூடப்பட்டிருப்பது தெரிந்தது. சந்தேகமடைந்த அவர்கள் அதைத் தோண்டினர். அப்போது கிருஷ்ணனின் உடல் கிடைத்தது.

அதற்கு கீழே அவர் மனைவி உடலும் அதன் கீழ் மகள், அதற்கு கீழ் மகன் ஆகியோர் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டது போல கிடந்தது. கிருஷ் ணனின் முகம் முழுவதுமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. சுசிலா நெஞ்சில் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார். அவர்களின் உடல்கள் கோட் டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சுத்தியலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.  இதுபற்றி விசாரிக்க தனிப்படைகளை அமைத்தனர். கொலை நடந்த வீட்டில் இருந்து 30 சவரன் நகை காணாமல் போயுள்ளது. அங்கிருந்து 4 மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரு போன் மட்டுமே ஆக்டிவாக இருக்கிறது. அதில் யார் யார் பேசியிருக்கிறார்கள் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர். அந்தப் பகுதியை சேர்ந்த 40 பேரிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். அதில் ஒருவர் கிருஷ்ணனிடம் உதவி யாளராக வேலை பார்த்த அனீஸ். அவரிடம் விசாரித்த போது தனது நண்பன் லிபீஸூடன் இணைந்து இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.

கிருஷ்ணனிடன் உதவியாளராக இருந்த அனீஸ், தனியாக மாந்த்ரீக தொழில் செய்து வந்துள்ளார். இது கிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை.  இந்நி லையில் அனீஸ் செய்யும் சில பூஜைகள் சரியாக ஓர்க் அவுட் ஆகவில்லையாம். இதற்கு கிருஷ்ணன் தான் காரணம் என்றும் அவரைக் கொன்று அவரது மந்திர சக்தியையும் அது தொடர்பான பொருட்களையும் கைப்பற்ற நினைத்தார் அனீஸ். அதற்கு நண்பரும் உதவுவதாக சொன்னார். இருவரும் கடந்த 29-ம் தேதி இருவரும் நன்றாக மது அருந்தினர். 

பின்னர், இரவு 12 மணிக்கு மேல் அவர் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் மின்சாரத்தை துண்டித்தனர். வெளியே தொழுவில் கட்டியிருந்த கன்றுக் குட்டியை குத்தினர். அது சத்தம் எழுப்பியதும் கிருஷ்ணனும் அவர் மனைவியும் வெளியே வந்தனர். ஆளுக்கு ஒருவரை தடியால் தாக்கினர். இருவரும் சத்தம் போட்டபடி சரிந்துவிழுந்தனர். பின்னர் மகள் ஓடி வந்தார். அவளையும் தாக்கினர். மகன் இதைக்கண்டு வீட்டுக்குள் ஓடினான். அவனை விரட்டிச் சென்று கத்தியால் குத்திக்கொன்று அனைவரையும் புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல சென்றுள்ளனர்.

ஆறு மாதத்துக்கு முன்பே இந்த கொலையை திட்டமிட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.