பகிரங்க மன்னிப்பு கேட்ட நீதிபதி ஸ்ரீஷானந்தா  முகநூல்
இந்தியா

கர்நாடகா: இஸ்லாமியர்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என கூறி சர்ச்சை பேச்சு; நீதிபதி பகிரங்க மன்னிப்பு!

PT WEB

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாச ஆச்சார் ஸ்ரீஷானந்தா, நில உரிமையாளர் – குத்தகைதாரர் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின்போது, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பெங்களூருவின் கோரிபாளையா பகுதியை பாகிஸ்தான் என்று கூறியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், நீதிபதி ஸ்ரீஷானந்தா ஒரு பெண் வழக்கறிஞர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோவும் பரவியது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இவ்விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என குறிப்பிட்டதற்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா பகிரங்க மன்னிப்பு கோரி உள்ளார்.

நீதிபதி ஸ்ரீஷானந்தா

இதுதொடர்பாக பேசிய நீதிபதி, “நீதித்துறை நடவடிக்கைகளின்போது நடந்த சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் சூழலுக்கு அப்பாற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அது உள்நோக்கத்துடனோ அல்லது யாருடைய மனதையோ அல்லது எந்த குறிப்பிட்ட சமூகத்தையோ புண்படுத்தும் நோக்கத்திலோ தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை அந்த கருத்தில் யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.