இந்தியா

நள்ளிரவில் தடம் புரண்டது பூர்வா எக்ஸ்பிரஸ்: 14 பேர் படுகாயம்

webteam

டெல்லிக்குச் சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் தடம் புரண்டதில் 13 பேர் படுகாயமடைந்தனர்.  

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து தலைநகர் டெல்லிக்கு பூர்வா என்ற எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்றும் வழக்கம் போல இயக்கப்பட்டது. ஹவுராவில் இருந்து டெல்லி சென்ற இந்த ரயிலில் சுமார் 900 பயணிகள் இருந்தனர். இந்த ரயில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே ரூமா என்ற கிராமத்தின் வழியே நள்ளிரவு ஒரு மணியளவில் சென்றபோது, திடீரென தடம் புரண்டது. 

இந்த விபத்தில் 4 பெட்டிகள் சரிந்து கவிழ்ந்தன. இந்த விபத்தில் சுமார் 14 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.