இந்தியா

ரூ. 100 கோடி அபராதம் - தமிழக அரசு தடை கோரிய மனு தள்ளுபடி 

webteam

ரூ. 100 கோடி அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையில் நதிகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ. 100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. 

இந்த வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனகூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.