ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் உரிமை கோரிய ஹேமந்த் சோரன். உடன் சம்பாய் சோரன் ட்விட்டர்
இந்தியா

ராஜினாமா செய்த சம்பாய் சோரன்... உரிமை கோரி 3-வது முறை முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்!

PT WEB

நில மோசடி வழக்கில் கைதான ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். சம்பாய் சோரன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களின் குழு தலைவராகத் ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். ஆளுநருடனான சந்திப்பின் போது முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் உடனிருந்தார்.

தொடர்ந்து தனது தலைமையிலான அரசு அமைய ஆளுநரிடம் ஹேமந்த் சோரன் உரிமை கோரியுள்ளார். இதன்மூலம் மூன்றாவது முறை முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். இன்று அவர் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.