இந்தியா

பெங்களூருவில் இரவில் பெய்த கனமழை - போக்குவரத்து பாதிப்பு

Veeramani

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொடர்ந்து கனமழை பெய்ததால் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்தது.

பெங்களூருவில் நேற்றிரவு இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் நகரின் பல இடங்கள், சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. விமான நிலையம் மழையால் சூழப்பட்டதால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர். அதிகளவு தண்ணீர் தேங்கியதால் விமான நிலையத்தின் வாயில் பகுதியில் வாகனங்கள் இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் விமானங்களில் வந்த பயணிகள் டிராக்டர் மூலம் பயணம் மேற்கொண்டனர். இதனிடையே, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் வெள்ளிக்கிழமை வரை பெங்களூருவில் கனமழை நீடிக்கும் என அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.