இந்தியா

உசிலம்பட்டியில் பெண் சிசுக்கொலை; தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் ரத்து.. முக்கியச் செய்திகள்

webteam

உசிலம்பட்டியில் மீண்டும் அரங்கேறிய பெண் சிசுக்கொலை பிறந்து ஏழு நாட்களான ‌‌‌‌‌‌‌குழந்தை உயிரிழந்ததை அடுத்து பாட்டி கைது.

சிஏஏ போராட்டம் மற்றும் கொரோனா பொதுமுடக்க விதிமீறல் தொடர்பான வழக்குகள் கைவிடப்படும்.கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய பரிசீலிப்பதாகவும் பரப்புரையில் முதலமைச்சர் பேச்சு.

திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேட்டுப்பாளையம் பரப்புரை கூட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் நிச்சயம் வரவேற்பேன்.அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி.

காங்கிரஸ் என்பது பெரிய பொய் என எம்.பி.கார்த்தி சிதம்பரம் பேச்சு.காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்றும் கருத்து.

தென் மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து.இரட்டை ரயில் பாதை பணியால் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வாங்க கூடாது.சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி.விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு.

வேகமாக தடுப்பூசி போடும் நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா.இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது.