Airtel | Jio | Vodafone Idea  Chatgpt
இந்தியா

செல்போன் கட்டண உயர்வுகள்: இது மலிவான டேட்டா யுகத்தின் முடிவா?

த. பிரபாகரன்

ஜியோ, ஏர்டெல் & வோடாஃபோன் ஆகியவை இந்த மாதம் முதல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் செல்போன் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, மேலும் இவை எதிர்காலத்திலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

செல்போன் கட்டணங்கள் எவ்வளவு உயரும்?

அனைத்து திட்டங்களுக்கான சராசரி கட்டண உயர்வு 10% முதல் 25% வரை இருக்கும், இதன் பொருள் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ₹150 வரை அதிகமாக செலுத்துவார்கள். குறிப்பாக 5G வரம்பற்ற டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள, ஒரு நாளைக்கு 2GB டேட்டா வழங்கும் திட்டங்களுக்கு குறைந்தபட்ச வரம்பு ₹349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வரம்பு ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா ஆக இருந்தது, இதற்கு மாதம் ₹239 செலவாகும். இது இந்த திட்டங்களைப் பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கு 46% அதிக மாத செலவாகும். ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகியவை “குரல் மட்டும் திட்டங்களுக்கான” கட்டணங்களை உயர்த்தவில்லை என்றாலும், ஏர்டெல் உயர்த்தியுள்ளது. எனவே, ஏர்டெல்லின் சில பயனர்கள் இந்த திட்டங்களுக்கு அதிக கட்டணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை ஏன் அமல்படுத்தின?

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, லாபத்திற்கு முக்கியமான, பயனர் ஒருவருக்கான சராசரி வருவாய் (ARPU) ஐ அதிகரிப்பதற்கும், நெட்வொர்க் தொழில்நுட்பம், ஸ்பெக்ட்ரம் மற்றும் 5G ஐ வழங்குவதில் முதலீடுகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் வசதியாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தின. நிதி நிலைத்தன்மைக்காகவும், மூலதனத்தில் இருந்து கிடைக்கும் லாபத்தை மேம்படுத்துவதற்காகவும் அதிக ARPU தேவை என, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஆகியவற்றால் வலியுறுத்தப்படுகிறது. ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல், இந்த துறையின் ஈடுபடுத்தப்பட்ட மூலதனத்தின் மீதான வருமானம் 9.5% மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் வாங்குதல் மற்றும் 5G சேவைகளை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கணிசமான முதலீடுகளுடன், எதிர்கால வளர்ச்சியை ஆதரிக்க கட்டண உயர்வுகள் அவசியமாகிவிட்டன.

கட்டண உயர்வு முதலீட்டாளர்களுக்கு நன்மை தருமா?

தள்ளுபடிகளை அள்ளி அளித்த காலம் முடிந்துவிட்டது. மேலும் விலை நிர்ணய அதிகாரம் திரும்பியுள்ளது. இது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். முதலீட்டாளர்களும் சிறந்த வருமானத்தைப் பெறலாம். டெலிகாம் பங்குகளின் சமீபத்திய எழுச்சியைப் பார்க்கும்போது, இது பங்குச் செயல்திறனை ஆதரிக்கும். உதாரணமாக, BNP Paribas இன் படி, கடந்த ஆண்டை விட ஏர்டெல் பங்குகள் நிஃப்டி 50 இன் 28% ஆதாயத்துடன் ஒப்பிடும்போது 71% அதிகமாக உயர்ந்துள்ளது.

நுகர்வை இது எப்படி பாதிக்கும்?

உலகளவில் மிகக் குறைந்த டேட்டா கட்டணங்களில் ஒன்றாக இந்தியா இன்னும் தொடரும். உதாரணமாக, அமெரிக்காவில் 1ஜிபியின் சராசரி விலை $5.37 மற்றும் இங்கு ₹0.16. இந்தியாவில் இணைய ஊடுருவல்(penetration), டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் இந்த குறைந்த விலைகள் ஒரு பெரிய காரணியாக உள்ளன. இருப்பினும், சமீபத்திய உயர்வுகள் நுகர்வோர் நிறுவனங்களை, குறிப்பாக FMCG நிறுவனங்களை மறைமுகமாக பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பொருளாதார பிரமிட்டின் கீழ் முனையில் உள்ளவர்களின் நுகர்வு பாதிக்கப்படலாம்.

வரும் காலங்களில் என்ன எதிர்பார்க்கலாம்?

2026-27 நிதியாண்டில் மற்றொரு கட்டண உயர்வைத் துறை பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள், இது இந்த முறை உயர்ந்த அதே அளவில் இருக்கும். ஏனென்றால், பார்தி ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டல், தொழில்துறை ARPU ஒரு மாதத்திற்கு ₹300 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறார். தற்போதைய அளவு ₹162-206, இது கட்டணங்கள் மேல்நோக்கி திருத்தப்பட்டால் மட்டுமே நடக்கும். இந்த உயர்வை நுகர்வோர் உள்வாங்கிக் கொள்ள முடியும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கருதுகின்றன. ஏனென்றால் இருப்பது 2-3 நிறுவனங்கள் மட்டுமே அல்லவா!