இந்தியா

கங்கனா ரனாவத் நடிப்பதால் அந்த படவாய்ப்பையே நிராகரித்தேன்: பி.சி.ஸ்ரீராம் ட்வீட்

Veeramani

கங்கனா ரனாவத் நாயகியாக நடிப்பதாக இருந்ததால், அந்த படவாய்ப்பையே நிராகரித்தேன் என்று பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் டிவீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ ஒரு படத்தில் கங்கனா ரனாவத் நாயகியாக இருந்ததால் அதை நிராகரிக்க வேண்டியிருந்தது. அவருடன் பணியாற்றுவதை நான் சஞ்சலமாக உணர்ந்தேன், எனது நிலைப்பாட்டை தயாரிப்பாளர்களுக்கு விளக்கினேன், அவர்கள் புரிந்துகொண்டார்கள். சில நேரங்களில் அது சரியானது என்று உணர்கிறேன், அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது கங்கனா ரனாவத் சினிமாத்துறை பற்றியும், மும்பையை ‘மினி பாகிஸ்தான்’ என்றும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவருகிறார். இதற்கு பலரின் மத்தியிலிருந்தும் அவருக்கும் கடும் எதிர்ப்பலையும், ஆதரவு அலையும் உருவாகி வருகிறது. இந்த சூழலில்தான் அவருக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.