இந்தியா

சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கான சிறப்பு பாதுகாப்பு வாபஸ்?

சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கான சிறப்பு பாதுகாப்பு வாபஸ்?

Rasus

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட வந்து சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பு பாதுகாப்பை (எஸ்.பி.ஜி) திரும்பப்பெற்று இசட் பிளஸ் பாதுகாப்பை அவர்களுக்கு அரசு வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எஸ்.பி.ஜி என்ற சிறப்பு பாதுகாப்பு குழு தான் பிரதமருக்கு பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.