இந்தியா

அக்.15 முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி

webteam

அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தளர்வுகளுடன் 5-ஆம் கட்ட பொதுமுடக்கத்தை அக்டோபர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அதில் ஏற்கெனவே உள்ள தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு 5-கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களையும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.