இந்தியா

டிஜிட்டல் பணபரிவர்தனைகள் குறித்த சந்தேகங்களுக்கு இலவச உதவி எண் அறிமுகம்

webteam

மின்னணு பணப்பரிவர்த்தனை தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் தர கட்டணமில்லா எண்ணை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

1444 என்ற எண்ணை தொடர்பு கொண்டு‌பல்வேறு சந்தேகங்களை மக்கள் கேட்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. முதலில் வட மற்றும் மேற்கு இந்தியாவில் இச்சேவை கொண்டு வரப்படும் என்றும் பிறகு நாடு முழுக்க மாநில மொழிகளில் கொண்டு வரப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.