இந்தியா

சென்னையில் பிரான்ஸ் தூதரக கிளை: தூதர் தகவல்

webteam

பிரெஞ்சு தூதரக கிளை அலுவலகம் வரும் அக்டோபர் மாதம் சென்னையில் திறக்கப்படும் என பிரான்ஸ் துணை தூதர் கேத்ரீன் ஸ்வாட் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டு துணைதூதரகம் இயங்கி வருகிறது. இதன் கீழ் தமிழகம், புதுவை, அந்தமான், நிகோபார், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் வருகின்றன. புதிய துணை தூதராக நியமிக்கப்பட்ட கேத்ரீன் ஸ்வாட் ஜூலை 31ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் நாட்டு துணை தூதரகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரெஞ்சு தூதரக கிளை அலுவலகம் அக்டோபர் மாதம் சென்னையில் திறக்கப்படும் என்றும் இந்திய-பிரான்ஸ் நட்புறவை பலப்படுத்தும் வகையில் வரும் ஜனவரி மாதம் புதுவையில் படகுப் போட்டி நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார். புதுச்சேரியில் தொழில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக தொழிலதிபர்கள் குழு புதுவைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.