இந்தியா

கூர்க்: பள்ளத்தில் விழுந்த யானையை ஜேசிபி எந்திரம் மூலம் காப்பாற்றிய வனத்துறையினர்!

கூர்க்: பள்ளத்தில் விழுந்த யானையை ஜேசிபி எந்திரம் மூலம் காப்பாற்றிய வனத்துறையினர்!

sharpana

பள்ளத்தில் விழுந்த யானையை ஜே.சி.பி எந்திரம் மூலம் காப்பாற்றியபோது, மகிழ்ச்சியில் யானை துள்ளிக்குதித்து காட்டுக்குள் ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கூர்க்கில் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்த யானை மேலே வரமுடியாமல் தவியாய் தவித்தது. இதனைக்கண்ட, பொதுமக்களும் வனத்துறையினரும் ஒன்று சேர்ந்து ஜே.சி.பி எந்திரத்தை வைத்து யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, யானை கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்திலிருந்து மேலே வந்து உயிர் தப்பிய மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து காட்டை நோக்கி ஓடியது. அதன் துள்ளல் ஓட்டம் காப்பாற்றியவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

ஜேசிபி எந்திரம் மூலம் யானையை மீட்கும் இந்த வீடியோ இன்று ட்விட்டர் முழுக்க வைரல் ஆகியுள்ளது.