டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து புதிய தலைமுறை
இந்தியா

டெல்லி | வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து... ஒருவர் உயிரிழப்பு!

PT WEB

டெல்லியில் பழைய காவல் தலைமை அலுவலகத்துக்கு எதிரே வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மூன்றாவது தளத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், ஜன்னல் வழியாக வெளியேற முயன்றனர்.

தகவலறிந்து 21 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள் 2 மணி நேரத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் அலுவலக கண்காணிப்பாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் எந்த ஆவணங்களும் சேதம் அடையவில்லை என வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.