காஜியாபாத் எக்ஸ் தளம்
இந்தியா

உத்தரப்பிரதேசம்| ரூ.500 திருடியதற்காக 10 வயது சிறுவனை அடித்தே கொன்ற தந்தை!

Prakash J

உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தின் தியோடி கிராமத்தைச் சேர்ந்தவர், நௌஷாத். இவரது மகன் ஆட் (10). இந்த நிலையில், இன்று காலை அவர் வீட்டில் வைத்திருந்த ரூ.500 காணாமல் போயுள்ளது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் நெளஷாத்துக்கு மகன் ஆட் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் ஆத்திரம் கொண்ட அவர், அடுப்பெரிக்கப் பயன்படுத்தப்படும் ஊதுகுழலைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் ஆட்டின் தாத்தா பாட்டி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், நெளஷாத்தையும் அவரது மனைவியையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மகனைத் தாக்கிய ஊதுகுழலையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீஸாரிடம், "நௌஷாத் தனது மகனை அடிக்கடி அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இன்று வீட்டில் பணம் காணாமல் போனபோதும் அவரை அடித்து உதைத்துள்ளார். ஆனால், கொலை செய்யும் அளவுக்கு அடித்ததுதான் கொடூரம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஹிஸ்புல்லா தலைவர் மரணம்... யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? இஸ்ரேலை வீழ்த்த தயாராகும் அடுத்த தலைவர்.. ?