இந்தியா

“படித்த குடும்பங்களில்தான் விவாகரத்து அதிகரித்துள்ளது” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் !

webteam

படித்த சமூகத்தில் அந்தஸ்தான குடும்பங்களில்தான் விவகாரத்து அதிகம் ஏற்படுகிறது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பேசிய அவர், “விவாகரத்துகள் மிக அதிகமாக படித்த குடும்பங்களில்தான் நடக்கின்றன. படிப்பு அவர்களை மூர்கத்தனமாக்குகிறது. தங்களால் எதுவும் செய்ய முடியும் என நினைக்கிறார்கள். இதனால் குடும்பங்கள் பிரிகிறது. இதன் விளைவாகவே ஒரு சமுதாயமே வீழ்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவர்கள் நம்முடைய வேலைகளையும் செயல்பாடுகளையும் வீட்டில் இருக்கும் பெண்களிடம் கூற வேண்டும். ஏனென்றால் குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் நம்மைவிட அதிக சுமையை சுமக்கிறார்கள்" என்றார்.