இந்தியா

டெல்லி பல்கலை.யில் ஐஎஸ் ஆதரவு வாசகங்கள்

webteam

டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளரான அங்கித் சங்க்வான் இதுதொடர்பாக மவுரிஸ் நகர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், பல்கலைக்கழகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பொருளாதார புலத்தின் சுவரில், ஐ ஆம் எஸ்ஒய்என் ஐஎஸ்ஐஎஸ் (I am SYN ISIS) என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சமூகப்பணி துறை கட்டட சுவர்களில் நக்சல்களுக்கு நீதி, ஆசாதி உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், அவற்றை எழுதியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். அங்கித் சவான் ஏபிவிபி மாணவர் அமைப்பின் உறுப்பினர் ஆவார்.  புகாரை உறுதிசெய்துள்ள டெல்லி காவல்துறை வடக்கு பகுதி துணை ஆணையர், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.