இந்தியா

பெண்களுக்கு இரவு பணி வேண்டாம்: சட்டப்பேரவைக் குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை

பெண்களுக்கு இரவு பணி வேண்டாம்: சட்டப்பேரவைக் குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை

webteam

பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்கள் பெண் ஊழியர்களை இரவு நேர பணியில் அமர்த்த கூடாது என கர்நாடக சட்டப்பேரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு , அவர்களுக்கு இரவு நேர பணி ஒதுக்குவதை நிறுத்த வேண்டும் என அந்த குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவன ஊழியர்களிடம் கருத்து கேட்ட பிறகு சட்டப்பேரவை குழு இந்த பரிந்துரையை வெளியிட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கும் நோக்கில் பெண்கள் இரவு நேர பணிகளில் ஈடுபட வழிவகை செய்து கடந்த ஆண்டு கர்நாடக அரசு விதிகளை தளர்த்தியது.