தீபக் சர்மா எக்ஸ் தளம்
இந்தியா

துப்பாக்கியால் சுட்டப்படி நடனம்.. சர்ச்சையில் சிக்கிய பாடி பில்டர் புகழ் திகார் சிறை அதிகாரி! #Video

டெல்லி திகார் சிறையில் உதவி கண்காணிப்பாளரான தீபக் சர்மா, பிறந்த நாள் விழா ஒன்றில் தன் கைத்துப்பாக்கியால் சுட்டப்படி நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

டெல்லி திகார் சிறையில் உதவி கண்காணிப்பாளராக இருப்பவர் தீபக் சர்மா. இவர் ஒரு பிறந்த நாள் விழாவில் பங்கேற்றிருந்தார். அந்த விழாவில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்த ’கல் நாயக்’ படத்தில் இருந்து பிரபலமான ’கல் நாயக் ஹூன் மைன்’ பாடலுக்கு தன் கைத்துப்பாக்கியுடன் நடனமாடுகிறார்.

இந்த சம்பவம் கோண்டா பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவின்போது பல சுற்று வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகள் காவல்துறையால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், இந்த வீடியோ இணையத்தில் வைரலானதால், தீபக் சர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்து வரும் பலரும் அவருக்கு எதிரான பதிவுகளைப் பதிவிட்டு வருவதுடன் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

ரூபாய் 200 கோடி மோசடி வழக்கின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் வீடுகளில் சோதனை நடத்தியதில் பெரும் பங்குவகித்தவர் இந்த தீபக் சர்மா. தவிர, உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவதிலும் பிரபலமானவராக அறியப்படுகிறார். இவரை, இன்ஸ்டாவில் 4.4 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் பின்தொடர்கின்றனர்.

இதையும் படிக்க: உடலுறவுக்கு கட்டணம் வசூலித்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவர்.. நிராகரித்த உயர்நீதிமன்றம்!