இந்தியா

சிறுவன் தற்கொலை முயற்சி: புளூவேல் காரணமா?

webteam

டெல்லியில் 16 வயது சிறுவன் ஒருவன் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டான். இதற்கு புளுவேல் இணைய விளையாட்டு காரணமா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புளூ வேல் சேலஞ்ச் என்பது இணைய விளையாட்டு. இந்தன் இறுதியான சவாலை செய்துவிட்டால் வெற்றியாளாராக அறிவிக்கப்படுவீர்கள். ஆனால் அந்த இறுதி சவால், தற்கொலை என்பதுதான் இந்த விளையாட்டின் அதிர்ச்சி. இந்தியாவில் ஊடுருவியுள்ள இந்த விளையாட்டுக்கு சில சிறுவர்கள் பலியாகியுள்ளனர். இதையடுத்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இந்த விளையாட்டின் இணைப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட இணைய நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் 16 வயது சிறுவன் ஒருவன் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டான். அசோக் விகார் பகுதியில் உள்ள குடியிருப்பில் 4வது மாடியில் காலணி, மூக்கு கண்ணாடி, மொபைல் ஃபோன் ஆகியவற்றை விட்டுவிட்டு கீழே குதித்துள்ளான். இதற்கு புளூவேல் விளையாட்டு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.