ஜாவேத் அக்தர், டெல்லி எக்ஸ் தளம்
இந்தியா

டெல்லி|இரவுப் பணியில் இருந்த மருத்துவரை சுட்டுக்கொன்ற சிறுவர்கள்.. மே.வங்கம் போல் அதிர்ச்சி சம்பவம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் டாக்டர்கள் மீது நோயாளிகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது டெல்லியிலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Prakash J

டெல்லி ஜெயித்பூர் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக இருவர் சென்றுள்ளனர். இதனால், மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இதன்பின் அவர்கள் இருவரும், ’டாக்டர் எங்கே? அவரைச் சந்திக்க வேண்டும்’ என கூறினர்.

இதன்பின்னர் அவர்கள் இருவரும் யுனானி மருத்துவர் ஜாவேத் அக்தர் இருக்கும் அறைக்குச் சென்றதும், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மருத்துவரைச் சுட்டுக் கொன்றனர். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துவரும் காவல்துறையினர், தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

டாக்டரை சுட்டுக்கொன்ற அவர்கள் இருவரும் மைனர் சிறுவர்கள் என போலீசார் தெரிவித்தனர். நோயாளிகள் என்ற பெயரில் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் டாக்டரை சுட்டு கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

murder

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இதே டெல்லியில் பெண் மருத்துவரை, குடிபோதையில் இருந்த ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்கூட மேற்கு வங்கத்திலும் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இறந்தவர்களின் சாம்பல்.. எஞ்சும் உலோகங்கள்.. ரூ.377 கோடி வருமானம் ஈட்டும் ஜப்பான்!