இந்தியா

ஆதாரைக் கட்டாயமாக்க டிச.31 வரை கெடு: மத்திய அரசு

webteam

சமூக நல திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 

ஆதார் தொடர்பான பொது நல வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு இத்தகவலை தெரிவித்துள்ளது. இதன்படி சமூக நலத் திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்க வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட காலக்கெடுவானது வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆதார் தொடர்பான வழக்குகளின் விசாரணை நவம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது.