இந்தியா

ஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 12 ராணுவ வீரர்கள் பலி

webteam

ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற கட்டட சரிவில் 12 ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். 

ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் பகுதியில் 4அடுக்குமாடி கட்டடம் ஒன்று நேற்று சரிந்தது. இந்தக் கட்டடத்தில் 30 ராணுவ வீரர்கள் மற்றும் சில பொதுமக்கள் இருந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு பணியில் ஈடுபட்டது. 

இந்நிலையில் தற்போது வரை இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களில் 17 ராணுவ வீரர்கள் மற்றும் 11 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி இதுவரை 12 ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் இடிபாடுகளில் இன்னும் ஒரு ராணுவ வீரர் சிக்கியிருக்கின்றனர். எனவே மீட்பு படையினர் தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.